LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அரசுப்பள்ளிகளில் பயோ-மெடரிக் வருகைப் பதிவேடு- அரசாணை வெளியீடு!

அரசுப் பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன், கடந்த மே மாதம் 30-ம் தேதி நடந்த பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது  அறிவித்து இருந்தார். 

அதன்படி தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. 3,688 உயர்நிலைப்பள்ளிகள், 4,040 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 7,728 பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கு கால தாமதமாக வருவதை தடுக்க முடியும் என பள்ளிக்கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது. ஏற்கனவே பயோமெட்ரிக் வருகைப் பதிவுத் திட்டமானது பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

by Mani Bharathi   on 08 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.