தமிழ் சிறப்பாக உச்சரிக்கும் ஊடகங்களுக்கு ரூபாய் ஐந்து லட்சத்துடன் விருது
அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழை சிறப்பாக உச்சரிக்கின்ற ஊடகங்களுக்கு ரூபாய் ஐந்து லட்சத்துடன் விருது வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்துள்ளார். காட்சி ஊடகங்களுக்கு தமிழ் உச்சரிப்பிற்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள் அமைத்து மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
|