ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், நியூசிலாந்தில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து, விக்டோரியா மாகாணத்தில் விற்கப்படும் ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து ஸ்ட்ராபெரி பழங்களுக்குள் ஊசியை மறைத்தவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ட்ராபெரி பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை வாங்கிய பழங்களை வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட்டில் திருப்பிக்கொடுத்து விட்டு பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆஸ்திரேலிய ஸ்ட்ராபெரிகளை சிறுதுண்டுகளாக வெட்டி ஊசி இருக்கிறதா என்பதை அறிந்த உண்ணுமாறு நியூசிலாந்து அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
|