சுற்றுச் சூழல் மாசுபாட்டால், பூமியின் வெப்பநிலை அதிகரித்து, பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் அதிகரித்து வருவதாக, உலகின் பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் கூறிவருகின்றனர். இந்நிலையில், ஆர்க்டிக் கடல் பகுதிகளில், உள்ள பனிப்பாறைகளின் அளவு, கடந்த ஓராண்டில், 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வருடம் ஆகஸ்டு மாதம், ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் செயற்கைக் கோள் மூலம் படம் எடுக்கப்பட்டன. அதே போல் கடந்த மாதம், அதே பகுதியில் படம் எடுக்கப்பட்டது. இந்த ஓர் ஆண்டு காலத்தில் மட்டும், ஆர்க்டிக் கடல் பகுதியில் பனிப் பாறைகள், கடந்த ஆண்டை விட, 60 சதவீதம் அதிகரித்துள்ளன. இதற்கான சான்றுகள், செயற்கை கோள் படத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. பூமி வெப்ப மயமாதல் மட்டுமே, பனிப்பாறைகள் உருகக் காரணம் என்பது தவறு. பூமியில் நடைபெறும் பல்வேறு மாற்றங்களால், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பது இயற்கையே. இந்த நிகழ்வு பூமி குளிர்வடைந்து வருகிறதா என்ற சந்தேகத்தை விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆர்க்டிக் கடல் பகுதியில் கடந்த ஆண்டை விட பனிப்பாறைகள் அதிக அளவில் உருவாகியுள்ளன.எனவே, பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பு குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
|