தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 100% வேலைவாய்ப்பு வெளியானது தமிழக அரசின் அரசாணை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் பல்வேறு வகையான அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வுகளில் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இதற்கான தமிழக அரசின் அரசாணை வெளியாகி உள்ளது. இதன்படி டிஎன்பிஎஸ்சி Group- போட்டித் தேர்வுகளில் தமிழ் பாட தாளில் 40 மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு மட்டுமே பிற தாள்கள் மதிப்பிடப்படும். Group- 3, Group-4 ஆகிய தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்படுகிறது, பதிலாக தமிழ் மொழித்தாள் மதிப்பீட்டு தேர்வாகிறது. மேலும் ஆசிரியர், மருத்துவ பணியாளர் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயமாகிறது.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 100% வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதியோடு அரசாணை வெளிவந்துள்ளது.
|