LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

3200 ஆண்டுகள் பழமையான பொருநை நாகரீகம்

3,200 ஆண்டுகள் பழமையான பொருநை நாகரிகம்

தமிழக அரசின் ஒத்துழைப்போடு நிகழ்ந்த தொல்லியல் ஆய்வுகளால்  பொருநை ஆற்றங்கரை நாகரிகம் குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.உலகின் பழமையான ஆற்றங்கரை நாகரிகங்களான சிந்து சமவெளி, மெசபத்தாமியா,நைல் நாகரிகம் போன்று பழமையான நாகரிகமாக அறியப்பட்டுள்ளது தமிழகத்தின் பொருநை ஆற்றங்கரை நாகரிகம்.ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ள அகழாய்வுகள் இதனை அறிவிக்கின்றன.

ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டு முதன்முறையாக அகழாய்வு நடைபெற்றது. அதன் பிறகு 1903,1904 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன.ஆதிச்சநல்லூர் பறம்பு பகுதி ஈமத்தாழிகள் பகுதியாக இருந்தது. மேலும் தொல்பொருட்கள் கண்டறியப்படும் வற்றாத தொல்பொருள் பகுதியாகவும் உள்ளது.  ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் சிந்து சமவெளி நாகரிகத்தைப் போன்று பெண் உருவங்கள் கிடைத்தன. மேலும் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 847 தொல்பொருட்கள் மூலம் இம்மக்களின் பழமையான வாழ்க்கை முறையை அறிய முடிகிறது. தமிழி, குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ள பானைகள் மூலம் இங்கு வாழ்ந்த மக்கள் தொடக்க வரலாற்று காலத்தைச் சார்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிவகளை,தாமிரபரணி ஆற்றின் வடகரையில் உள்ளது.இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள உமி நீங்கி இருந்த நெல்மணிகள் அமெரிக்காவின் Beta Analytic ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு கி.மு 1155 ஆண்டு காலத்தைச் சேர்ந்தவை என அறியப்பட்டது.

கொற்கைப்பகுதி  மக்கள் மேல் மற்றும் கீழ்ப்பகுதி நாட்டு மக்களிடம் கிமு 8-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே வணிகத் தொடர்பு கொண்டு இருந்ததை அப்குதியில் நடந்த அகழாய்வு உறுதிப்படுத்தியுள்ளது. 

ஆதிச்சநல்லூர் சிவகளை,கொற்கை ஆகிய பகுதிகளில் தமிழ் மக்கள் வாழ்ந்த பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமையானது என்பது நெல்மணி ஆய்வின் மூலமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.   தமிழக அரசின் சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு தமிழர் நாகரிகப் பெருமையினை பறைசாற்றும் வகையில் பொருநை அருங்காட்சியகமும் அமையவிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

by R.Gnanajothi   on 15 Sep 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.