LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருக்குறள் அறிஞர், புலவர் இரா.இளங்குமரனார் இயற்கை எய்தினார்

திருக்குறள் அறிஞர், புலவர் இரா.இளங்குமரனார் இயற்கை எய்தினார்

திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் பகுதியைச் சேர்ந்த படிக்கராமர் வாழவந்தம்மையார் இணையருக்கு 1927, ஜனவரி 30 ஆம் நாள் மகனாகப் பிறந்தவர் இரா.இளங்குமரன். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சொற்பொழிவாற்றும் மற்றும் பாடல் இயற்றும் திறனும் கொண்டிருந்தார். நூலாசிரியர்,பாவலர், உரையாசிரியர், இதழாசிரியர் எனப் பன்முக திறன் கொண்டவர்.

1958 ஆம் ஆண்டு குண்டலகேசியை முழுமைப்படுத்தி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்துள்ளார்.1963 ஆம் ஆண்டு இவருடைய 'திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு' எனும் நூலை பிரதமர் நேரு அவர்கள் வெளியிட்டிருக்கிறார். 2003ஆம் ஆண்டு 'இலக்கிய வரிசையில் புறநானூறு' எனும் இவருடைய நூல் அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் திருக்குறள் தமிழ் மரபுரை, தேவநேயம், தனித்தமிழ் இயக்கம், காக்கைப்பாடினியம், யாப்பெருங்கலம் (இலக்கணம்), புறத்திரட்டு (இலக்கணம்), எங்கும் பொழியும் இன்பத்தமிழ் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார் இளங்குமரனார்.

திருச்சி மாவட்டம் அல்லூர் என்னுமிடத்தில் திருவள்ளுவர் தவச்சாலை,மற்றும் பாவாணர் நூலகம் ஆகியவற்றை நடத்தியுள்ளார். தமிழ் வழித் திருமணங்கள் நடத்தியவர்.
தமிழக அரசின் சிறப்பு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றவர்.தமிழ்க்காப்பு கழகச் செயலாளர், மதுரை மாவட்ட தமிழாசிரியர் கழகச் செயலாளர் பணிகளை வகித்தவர்.

இளங்குமரனாருக்கு இரங்கல் தெரிவித்த ஸ்டாலின் அவர்கள் தமிழையே உயிர் மூச்சாக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞர் இளங்குமரனார் அவர்களின் மறைவு தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.தமிழ்மறை திருக்குறள் வழியில் தமிழர்களின் திருமணங்களை நடத்தியதுடன், தவச்சாலை நிறுவி வெள்ளுடை ஞானியாக வாழ்ந்தவர்.அவருடைய தமிழ்ப்பணி போற்றுதலுக்குரியது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் தமிழ்ச்சான்றோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தமிழ் போல் அவரது இறவாப் புகழும் நிலைத்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.

முதுமுனைவர் இளங்குமரனார் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இவருக்கான அஞ்சலியின் போது செலுத்தப்பட்ட திருக்குறள் மாலை இறுதி வரை அகற்றப்படாமல் இருந்தது நெகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.

by R.Gnanajothi   on 30 Jul 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.