LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஒலிம்பிக் 2021,தொடர் ஓட்டத்தில் களமிறங்கும் தமிழகத்தின் தங்கங்கள்

ஒலிம்பிக் 2021, தொடர் ஓட்டத்தில் களமிறங்கும் தமிழகத்தின் தங்கங்கள்
ஜப்பான்,டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தடகள வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.பதக்கம் வெல்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இம் மாதம் (ஜூலை) 23 ஆம் தேதியன்று 2021 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெறவுள்ளன.
இதில் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ்,தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி வீரமணி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகநாதன் ஆகியோர் இந்தியாவின் சார்பில் தொடர் ஓட்ட வீரர்களாக ஒலிம்பிக் போட்டியில் களம் காண உள்ளனர்.

*ஆரோக்கிய ராஜீவ் (ஆண்கள்  4×400 மீ தொடர் ஓட்டம்)
*ரேவதி வீரமணி (கலப்பு   4×400 மீ தொடர் ஓட்டம்)
*தனலட்சுமி சேகர் (கலப்பு 4×400 மீ தொடர் ஓட்டம்)
*சுபா வெங்கடேசன் (கலப்பு 4×400 மீ தொடர் ஓட்டம்)
*நாகநாதன் பாண்டி (ஆண்கள் 4×400 மீ தொடர் ஓட்டம்)

ஆரோக்கிய ராஜீவ் இராணுவ வீரர் ஆவார். அர்ஜுனா விருது பெற்றவர்.லால்குடி பகுதியைச் சேர்ந்த இவர் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற்றவர் ஆவார். மூன்று முறை ஆசியப் போட்டிகளில் பங்குபெற்று பதக்கம் பெற்றுள்ளார். இவர் இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

திருச்சி திருவெறும்பூர் அருகில் கூத்தைப்பார் பகவதி புரத்தைச் சேர்ந்தவர் சுபா வெங்கடேசன். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடிய இவர் முதன் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.

மதுரை சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரேவதி வீரமணி, தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர்.மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் கண்ணன் இவரது வெற்றிக்கு முக்கியப் பங்காற்றி உள்ளார்.

இராமநாதபுரம்,கமுதி அருகில் உள்ள சிங்கப்புலியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகநாதன். இவர் காவலராக உள்ளார். ஒலிம்பிக்கிற்கு தேர்வாகி அநேகரின் வாழ்த்துக்களைப் பெற்று வருகிறார்.

குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி சேகர்.இவர் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான டூட்டி சந்த் மற்றும் பி.டி.உஷா ஆகியோரின் சாதனைகளை முறியடித்தவர். இவர் தற்போது ஒலிம்பிக் போட்டியில் முதன் முறையாக பங்கேற்கிறார்.

by R.Gnanajothi   on 12 Jul 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.