LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வியக்க வைக்கும் அரியலூர் அகழாய்வுப் பணிகள், முதலாம் இராஜேந்திர சோழனின் அரண்மனை பாகம் கண்டுபிடிப்பு

வியக்க வைக்கும் அரியலூர் அகழாய்வுப் பணிகள் ,முதலாம் இராஜேந்திர சோழனின் அரண்மனை பாகம் கண்டுபிடிப்பு
கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் முதலாம் ராஜேந்திர சோழ மன்னனுடைய அரண்மனையின் இரண்டாம் பாகம் கண்டறியப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் அமைந்துள்ளது மாளிகைமேடு பகுதி. இங்கு தமிழக தொல்லியல் துறையினரால் முதற்கட்ட  அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகள் மார்ச் மாதம் தொடங்கப்பட்டன. கொரோனா காரணமாக அகழாய்வுப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டிருந்தன. ஜூன் 14  ஆம் தேதி முதல் மீண்டும்‌ பணிகள் துவங்கியுள்ளன.

ஏற்கனவே இப்பகுதியில் இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள், சீன கலை நயமிக்க மணிகள், பழங்கால ஓட்டு பகுதிகள் ஆகியவை அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளன.முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் சுற்றுச்சுவர் மட்டும் கண்டறியப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்ட அகழாய்வின் போது அரண்மனையின் இரண்டாவது பாகம் கண்டறியப்பட்டுள்ளது.

வரலாற்று ஆவணங்களில்  முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் மாளிகைமேடு பகுதியில் அரண்மனை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கூறப்பட்டுள்ள அரண்மனையின் பகுதி கண்டறியப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் சோழர் வரலாற்றினை மேலும் அறிந்து கொள்ளலாம் என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம்- மாளிகைமேடு ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள்  நடைபெறவும்,கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகத்தினை கண்டறிவதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கள ஆய்வு செய்யவும் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழுவினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர் மாவட்டம் சென்ராயன் பாளையம், சிவகங்கை மாவட்டம் இலந்தக்கரை,கோவை மாவட்டம் மூலப்பாளையம், வேலூர் மாவட்டம் வசலை, புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டு அது பரிசோதனையில் உள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து அகழாய்வின் போது கிடைக்கும் பழைமையும் நாகரிகச் சிறப்பும் உணர்த்தும் கண்டுபிடிப்புகள் தமிழரை பெருமிதம் கொள்ள வைத்துள்ளன.

by R.Gnanajothi   on 12 Jul 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.