மத்திய வேளையில் ஒரு மணிநேரம் தூங்கினால், மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்விற்கு 40 ஆரம்பப் பள்ளி மாணவர்கள் உட்படுத்தப்பட்டு அவர்களின் கற்றல் திறன் பரிசோதிக்கப்பட்டது. ஆய்வுகளின் முடிவில், பகலில், ஒரு மணி நேரம் தூங்கும் மாணவர்களின் நினைவாற்றல் மற்றும் கற்கும் திறன் அதிகரித்ததை கண்டுபிடிக்கபட்டது. மேலும், பள்ளிக் குழந்தைகளின் வாழ்வில், துவக்கத்திலேயே, நினைவாற்றலை அதிகரிப்பது அவசியம் என்பதால், அதற்கு குழந்தைகளை மதிய நேரத்தில், சிறிது நேரம் தூங்கவிட்டால் படிப்பில் சிறந்தவர்களாக விளங்குவர் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
|