|
|||||
கத்தார் தமிழர் சங்கம் நடத்திய அப்துல் கலாம் நினைவு பேச்சுப் போட்டி |
|||||
கத்தார் நாட்டில் உள்ள இந்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி கத்தார் தமிழர் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்ட இந்திய பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் 140 பேர் கலந்து கொண்டனர்.
****************************************
இதன் இறுதிச்சுற்று கடந்த நவம்பர் 3ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதலாக, இந்திய கலாச்சார மய்யத்திலுள்ள அசோகா உள்ளரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது.வலுவான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால தூண்கள் மாணவர்கள் என்று டாக்டர் கலாம் நம்பினார்.
******************************
மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும்
*************************************
தமிழறிஞர், கவிதை படைத்த இலக்கியவாதி, அறிவியல் விஞ்ஞானி, தத்துவ கருத்துக்களை புகட்டிய மெய்ஞானி, அறநெறியில் வாழ்ந்த ஆன்மீகவாதி என பன்முகம் கொண்ட சாதனையாளரை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கத்தார் தமிழர் சங்கம் நடத்தி வரும் இந்த பேச்சுப்போட்டியில் வருடாவருடம் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
****************************
தமிழகத்தை விட்டு வெளியே கத்தார் போன்ற அயலகத்தில் வாழ்ந்து வந்தாலும், மாணவ மாணவியர் சிறப்புமிக்க இந்த பேச்சுப்போட்டியில் ஆர்வமாய் கலந்துகொண்டு அழகான தமிழில் திறம்பட தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு கோப்பைகளுடன் சான்றிதழ்களும் மற்றும் இறுதிச்சுற்றில் பங்கேற்ற மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் கத்தார் தமிழர் சங்கத்தால் வாழ்த்தி வழங்கப்பட்டது.
கத்தார் நாட்டில் உள்ள இந்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி கத்தார் தமிழர் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்ட இந்திய பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் 140 பேர் கலந்து கொண்டனர். இதன் இறுதிச்சுற்று கடந்த நவம்பர் 3ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதலாக, இந்திய கலாச்சார மய்யத்திலுள்ள அசோகா உள்ளரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது.வலுவான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால தூண்கள் மாணவர்கள் என்று டாக்டர் கலாம் நம்பினார். மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் தமிழறிஞர், கவிதை படைத்த இலக்கியவாதி, அறிவியல் விஞ்ஞானி, தத்துவ கருத்துக்களை புகட்டிய மெய்ஞானி, அறநெறியில் வாழ்ந்த ஆன்மீகவாதி என பன்முகம் கொண்ட சாதனையாளரை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கத்தார் தமிழர் சங்கம் நடத்தி வரும் இந்த பேச்சுப்போட்டியில் வருடாவருடம் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை விட்டு வெளியே கத்தார் போன்ற அயலகத்தில் வாழ்ந்து வந்தாலும், மாணவ மாணவியர் சிறப்புமிக்க இந்த பேச்சுப்போட்டியில் ஆர்வமாய் கலந்துகொண்டு அழகான தமிழில் திறம்பட தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு கோப்பைகளுடன் சான்றிதழ்களும் மற்றும் இறுதிச்சுற்றில் பங்கேற்ற மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் கத்தார் தமிழர் சங்கத்தால் வாழ்த்தி வழங்கப்பட்டது.
|
|||||
by Kumar on 20 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|