LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை- அந்நாட்டு அரசு அதிகாரிகள் தகவல்!

கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பன்னாட்டுத் தமிழர் நடுவத்தைச் சேர்ந்தவர்களுடன் கம்போடிய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குனர் மார்ன் சொப்ஹீப் மற்றும் அத்துறை அதிகாரி பொன் காமரா ஆகியோர், தஞ்சைப் பெரிய கோயில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகிய சோழர்கள் மற்றும் பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தொடர்ந்து 5 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது கம்போடிய அரசர்களுக்கும் பல்லவ, சோழ அரசர்களுக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்புகள் கண்டறியப்பட்டன.

இதைத் தொடர்ந்து, கம்போடிய அரசின் கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகளும், பன்னாட்டுத் தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலமும் சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். 

இந்தச் சந்திப்பின்போது, கம்போடிய அதிகாரிகள் கூறியதாவது:

திருக்குறளை கெமர் மொழியில் மொழிப்பெயர்த்து கம்போடிய பள்ளிப் பாடங்களில் இணைக்கப்படும். ராஜேந்திர சோழனுக்கும், இரண்டாம் நந்திவர்மனுக்கும் கம்போடியாவில் சிலை வைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பன்னாட்டுத் தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கம்போடிய மன்னர்கள் ஒரு தனி ஸ்டைலில் அமருவார்கள், தமிழகத்திலுள்ள சிலைகளில் நந்திவர்ம பல்லவன் அதே ஸ்டைலில் அமர்ந்திருப்பதால் அவர் கம்போடிய மன்னர்தான் என்று எங்களுடன் சுற்றுப்பயணம் செய்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

6-ம் நூற்றாண்டில் கேமர் பேரரசை ஆட்சி செய்த மகேந்திர வர்மன் தான் பல்லவ தேசத்திற்கும் மன்னனாக இருந்ததற்கான அத்துணை அடையாளங்களும் மாமல்ல புரத்தில் இருந்தது கண்டு பெரிதும் ஆச்சரியப்பட்டனர்.

ராஜேந்திர சோழன் கம்போடிய மன்னர்களுக்கு உதவி செய்ததால் அவருக்கு சிலை வைக்க பன்னாடுத் தமிழர் நடுவம் திட்டமிட்டால், கம்போடிய மன்னன் இரண்டாம் ஜெயவர்மனோடு சேர்த்து ராஜேந்திர சோழனுக்கும் கம்போடியாவில் சிலை வைத்துக் கொள்ளலாம் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். 
கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கும், இரண்டாம் நந்திவர்மனுக்கும் சிலை அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2020) மே மாதம் சிலைகளின் திறப்பு விழா நடைபெறும். இச்சிலைகள் திறப்பு விழாவிற்கு உலகம்  முழுவதிலும் இருந்து சுமார் 25 ஆயிரம் தமிழர்கள் கலந்து கொள்வார்கள். இதன் மூலம் இந்தியா- கம்போடிய நட்பு மேம்படுத்தப்படும்.

கம்போடிய பள்ளிப் பாடத்திட்டத்தில் சோழ, பல்லவ பேரரசுகளின் வரலாறும் பாடமாக இணைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இவ்வாறு திருத்தணிகாசலம் கூறினார்

by Mani Bharathi   on 09 Jul 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.