நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஒரு முன்னோடியாக செயல்பட்ட புதுமைப்பித்தன் மற்றும் சிறந்த தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் ஆகியோருக்கு நெல்லை மாநகராட்சி, காவல் நிலைய பூங்காவில் மார்பளவு சிலை அமைக்க முடிவு செய்துள்ளது. நெல்லை மேயர் சரவணன் தொ. பரமசிவன் அவர்களின் குடும்பத்தினைச் சந்தித்து இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தொ. பரமசிவன் அவர்கள் திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார வழக்கங்களை தனது எழுத்துகள் மூலம் அடுத்த தலைமுறை அறியச் செய்தவர். கிராமப்புறங்களில் நம் முன்னோர் கடைப்பிடித்த சடங்குகளின் உட்கருத்தையும், அறிவியல் பூர்வ தகவல்களையும் வெளிப்படுத்தியவர். தவறான கருத்துக்களை உடைத்தெறிந்து உண்மை தகவல்களை தன் எழுத்துக்களால் நிலைநாட்டியவர். அவருக்குச் சிலை அமைப்பதில் பெருமை கொள்கிறோம் என்று கூறினார்.
|