விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அமைந்துள்ள அத்திபட்டி என்ற கிராமத்தில் உள்ள தெருக்களுக்கு அருமையான தமிழ்ப் பெயர்களை சூட்டி பாராட்டுகளைப் பெற்றுள்ளார் ஊராட்சி தலைவர் இராஜேஸ்வரி அவர்கள். கட்ட கஞ்சம்பட்டி, இலட்சுமி நகர், நாராயணபுரம், ஜெயராம் நகர், NGO காலனி ஆகியவை ஆத்திபட்டி பகுதியில் உள்ளன. இங்கு அமைந்துள்ள தெருக்கள் பலவற்றிற்கு பெயரிடப்படாமல் இருந்துள்ளது. இதனால் பிற பகுதிகளில் இருந்து வருவோர் மற்றும் தபால்காரர்கள் சிரமத்தினை அடைந்துள்ளனர். தெருக்களுக்கு பெயரிட முடிவெடுக்கப்பட்டபோது குறல் வீதி, அரும்பு வீதி,வைகறை வீதி, செங்கரும்பு வீதி, பைந்தமிழ் வீதி, தென்பெண்ணை வீதி என்று செம்மொழி தமிழில் பெயர் சூட்டி அசத்தியுள்ளார் . இராஜேஸ்வரி. இச்செயல் அப்பகுதி மக்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் மாதங்கள், நதிகள், மலர்கள் ஆகியவற்றின் பெயர்களை தெருக்களுக்கு சூட்டியுள்ள ஊராட்சி தலைவர் கூகுளில் தேடினால் தெருக்களின் முகவரியினை எளிதாகக் கண்டறிய, வேண்டிய பணிகளையும் செய்ய உள்ளதாக கூறினார். நம் அடையாளத்தை தொலைக்காமல் இருக்க மொழியைக் காக்க வேண்டும். அதற்கு நம் நாட்டிலும் வீட்டிலும் மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.இதனை அறிந்து செயல்பட்டுள்ள ஊராட்சி தலைவருக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன.
|