பள்ளிகளில் படிப்பதற்கென்று ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்று யுனெஸ்கோ திட்டவட்டமான தனது அறிக்கையினை வெளியிட்டுள்ளது. யுனெஸ்கோவின் 2023 உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் இணைய வழி மற்றும் தொழில்நுட்பங்களின் அதிகப்படியான குறுக்கீடுகள் கவலை தருவதாக உள்ளது, என்று யுனெஸ்கோ கூறியுள்ளது. கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு இணைய முறைக் கல்வியினை அதிகம் நம்ப கூடாது. ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு கற்றலில் எதிர்மறையான தாக்கத்தினையே ஏற்படுத்துகிறது என்று விளக்கம் தந்துள்ளது. பின்லாந்து மற்றும் பல நாடுகள் பள்ளிகளில் ஸ்மார்ட் ஃபோன்களை ஏற்கனவே தடை செய்துவிட்டன .
|