LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சாகித்திய அகாதமி பால புரஸ்கார்,யுவ புரஸ்கார் 2023,விருது பெறும் தமிழர்கள்

சாகித்திய அகாதமி பால புரஸ்கார்,யுவ புரஸ்கார் 2023,விருது பெறும் தமிழர்கள்

இலக்கிய உலகின் உயர்ந்த அங்கீகாரத்தை அளிக்கும் விருதாகப் பார்க்கப்படும் சாகித்திய அகாதமி விருதுகள் 2023 அறிவிக்கப்பட்டுள்ளன. 
குழந்தைகள் இலக்கியப் படைப்பினை ஊக்குவிக்கும் விதமாக சாகித்திய அகாதமியால் வழங்கப்படும் பால புரஸ்கார் விருது

2023 தமிழக எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் 'ஆதனின் பொம்மை' என்ற நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நாவல் கீழடி மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் குறித்த அறிவை இளம் சமூகத்திற்கு வழங்குவதாக உள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இந்திய ரயில்வேயில் பணியாற்றியுள்ளார். தூரம் அதிகம் இல்லை, கண்ணாடிச் சுவர்கள், நீலக்கனவு போன்ற சிறுகதைகளை எழுதியுள்ளார். மாயக்கண்ணாடி,பச்சை நிறம்,பேசும் தாடி, ரகசியக் கோழி, அண்டா மழை போன்றவை இவருடைய குழந்தைகளுக்கான படைப்புகள்.மேலும் இவர் குறிப்பிடத்தக்க அளவில் மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். கட்டுரைகளையும் எழுதி உள்ளார். 
35 வயதுக்குட்பட்ட இலக்கியப் படைப்பாளிகளுக்காக வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் இராம் தங்கம் அவர்கள் எழுதிய 'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்பிற்கு கிடைத்துள்ளது.எழுத்தாளர் இராம் தங்கம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பிறந்தவர். வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் திருக்கார்த்தியல் சிறுகதை தொகுப்பிற்கென்று பல விருதுகளைப் பெற்றுள்ளார். சுஜாதா விருது (திருக்கார்த்தியல்) அசோகமித்திரன் விருது (திருக்கார்த்தியல்), படைப்பு இலக்கிய விருது (இராஜவனம் குறுநாவல்),சிறந்த வரலாற்றுப் புத்தகத்திற்கான 'தெற்கு எழுத்தாளர் இயக்க விருது' (காந்திராமன்).இவர் நாவல், கட்டுரைகள், சிறுகதை தொகுப்புகள், வரலாற்று நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.

by R.Gnanajothi   on 07 Jul 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.