மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வபிரபு ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்முறை (Triple jump) தாண்டுதலில் 16.79 மீட்டர் உயரத்திற்கு தாண்டி சாதனை நிகழ்த்தியதன் காரணமாக செல்வபிரபு இவ்விருதிற்கென்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.செல்வபிரபு தற்போது திருச்சியில் உள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றார். கியூபாவின் யோன்ட்ரிஸ் என்பவர் இவரது பயிற்சியாளராக உள்ளார். கிரீஸ் நாட்டில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதில் மும்முறை தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் செல்வ பிரபு. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பீந்தர் சிங் என்பவர் இதற்கு முன் 16.63 மீட்டர் தாண்டி சாதனை படைத்துள்ளார். இச்சாதனையினை வெற்றி கொண்டு புது இலக்கினை நிர்ணயித்துள்ளார் செல்வபிரபு. பல விளையாட்டுகள் இருப்பினும் மும்முறை தாண்டுதல் விளையாட்டே தனக்கு மிகப் பிடித்த தடகள விளையாட்டாக இருப்பதாகவும், புதிய சாதனைக்காக பயிற்சிகள் பலவற்றை செய்து தொடர்ந்து தன்னை தயார்படுத்தி வருவதாகவும் செல்வபிரபு தெரிவித்துள்ளார்.
|