சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ள நீதிபதி சந்துரு அவர்கள் தன் சட்ட புத்தகங்கள் மற்றும் தன்னிடம் உள்ள அனைத்து புத்தகங்களையும் கலைஞர் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.தன் அப்பாவின் புத்தகமான 'திருவருட்பா' தவிர அனைத்து புத்தகங்களையும் நூலகத்திற்கு வழங்கி விட்டதாக அவர் கூறியுள்ளார். எட்டு தளங்களுடன் உலகத்தரம் மிக்கதாக மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது. நூலகத்திற்கு பலரும் புத்தக நன்கொடை செய்து வருகின்றனர். நீதிபதி சந்துரு 4972 புத்தகங்களை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனுக்கென்று அளித்துள்ளார். நீதிபதியாக 96,000 வழக்குகளுக்கு தீர்ப்புகளை வழங்கி,முடிக்க புத்தக வாசிப்பு தான் தனக்கு உறுதுணையாக இருந்தது என்று சந்துரு பகிர்ந்துள்ளார். அவர் வழங்கிய புத்தகங்களில் அம்பேத்கர் குறித்த புத்தகங்கள், மார்க்சியம் அரசியல், வரலாறு, பெண்ணியம் எனப் பல புத்தகங்கள் இருப்பதாக் கூறியுள்ளார். நான் நன்றாக இருக்கும் போதே புத்தகங்களை கொடுத்து விட எண்ணினேன். இவை கற்கும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.
|