விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதுமையான தொல்லியல் பொருள்கள்
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள வெம்பக்கோட்டையில் அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருட்கள் நம்மை அசர வைக்கும் விதமாய் அமைந்துள்ளன. சுடு மண்ணாலான அகல் விளக்கு, அழகிய வேலைப்பாட்டுடன் 2000 ஆண்டுகளாகியும் இன்றளவும் சிதையாமல் கண்டெடுக்கப்பட்டுள்ள குவளை, யானை தந்தத்தினால் செய்யப்பட்டுள்ள அணிகலன், சுடுமண்ணால் செய்யப்பட்டடிருந்த விளையாட்டுப் பொருட்கள் மேலும் தற்போது சுடுமண்ணாலான தொங்கட்டான்கள் மற்றும் சுடுமண்ணாலான புகைபிடிப்பானும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
|