அடிப்படைச் சட்டங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும், பணி நிறைவு விழாவில் உயர் நீதிமன்ற கிளை நீதிபதி தாரணி அவர்கள் பேச்சு
மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தாரணி அவர்கள், பணி நிறைவு பெற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபச்சார நிகழ்வு நடந்தது. இதில் பல முக்கிய நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் நேரடியாகவும், காணொளி மூலமாகவும் கலந்து கொண்டனர். நீதிபதி தாரணி அவர்கள் பேசும்போது அடிப்படைச் சட்டங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தினை முன் வைத்தார்.இந்திய தண்டனைச் சட்டம்,சாட்சிய சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், சாலைப் பாதுகாப்புச் சட்டம், மற்றும் அடிப்படைச் சட்டங்கள் பள்ளிகளில் மாணவர்கள் கற்க பாடங்களாக கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
32 ஆண்டுகள் நீதித்துறையில் பணி புரிந்துள்ளேன்,மன நிறைவோடு ஓய்வு பெறுகிறேன் என்றும் தாரணி அவர்கள் தெரிவித்தார்.அரசு தலைமை நீதிபதி சண்முகசுந்தரம் அவர்கள் பேசும்போது, தூத்துக்குடி பரமன் குறிச்சியைச் சேர்ந்த நீதிபதி தாரணி 2017-ல் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தாரணி பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார். சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்று கூறினார்.
|