LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார்

திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார்

இயக்கத்திலும் நடிப்பிலும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் மிளிர்ந்த தமிழ்க் கலைஞன் 'மனோபாலா' என அறியப்படும் பாலச்சந்தர் அவர்கள் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 69.
தஞ்சாவூருக்கு அருகே உள்ள கிராமப் பகுதியில் மனோபாலா என்று அறியப்படும் பாலச்சந்தர் பிறந்தார். இவரது பெயர் பாலச்சந்தர் என்ற போதும் கட்டுரைகள் எழுதிய போது பயன்படுத்திய புனைப்பெயரும் மேடைப் பெயருமான மனோபாலா என்ற பெயரிலேயே அறியப்பட்டார்.

இயக்குனர் பாரதிராஜாவின் படமாகிய 'புதிய வாழ்க்கை' என்ற படத்தில் உதவி இயக்குனராக 1979 ஆம் ஆண்டில் இவரது திரைத்துறைப் பயணம் துவங்கியது.இவர் இயக்குனராக அறியப்பட்ட முதல் படம் ஆகாயகங்கை (1982). இப்படம் தோல்வி கண்ட போதும் அடுத்ததாக இவர் இயக்கி வெளியாகிய 'பிள்ளை நிலா' (1985)பெரும் வெற்றி அடைந்தது.விஜயகாந்த், ரஜினி ஆகிய நடிகர்களை ஆரம்பகாலத்தில் இயக்கி வெற்றியடைந்துள்ளார். இவர் இயக்கிய படங்கள் அப்போது தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் வெளிவந்துள்ளன.24 படங்களை இயக்கியுள்ளார் மனோபாலா.

நடிகராக,முழு நேரம் களம் கண்டது 2000 ஆண்டிலிருந்து தான்.துணை நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் மனோபாலா‌. கிட்டத்தட்ட 700 படங்களில் நடித்துள்ளார். "எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன் "என்று விவேக் கூறும் நகைச்சுவை வசனக் காட்சி மனோபாலா அவர்களை மிக இரசிக்க வைத்தது.சிறுத்தை, பிதாமகன், சந்திரமுகி, அரண்மனை போன்ற படங்களில் நகைச்சுவைப் பகுதிகளில் தோன்றும் மனோபாலா இயல்பான புன்னகையை வரவித்திருப்பார்.

'சதுரங்க வேட்டை' படத்தினை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமாகி, அதற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த அறிமுக திரைப்பட தயாரிப்பாளருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். திரைப்பட பங்களிப்பிற்காக தென்மேற்கு அமெரிக்கப் பல்கலைக்கழகம் 'முனைவர்' பட்டம் வழங்கியுள்ளது.உலக சாதனையாளர் கவுன்சிலின் 'வாழ்நாள் சாதனையாளர்' பட்டமும் பெற்றுள்ளார்.

மறைந்த விவேக், மயில்சாமி ஆகிய கலைஞர்களின் இழப்போடு, மனோபாலா அவர்களின் இழப்பும் திரை இரசிகர்களின் கண்களைப் பனிக்கச் செய்துள்ளது.

by R.Gnanajothi   on 19 May 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.