இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 21,22,23 தேதிகளில் நடக்கவிருக்கும் இரண்டாவது உலகத் தமிழ் திருக்குறள் மாநாட்டுக்கு அனுப்பி வைக்கக் கன்னியாகுமரியிலிருந்து தஞ்சைக்கு ஊர்வலமாக இரு திருவள்ளுவர் சிலைகள் கொண்டுவரப்பட்டன. இம்மாநாட்டைத் தமிழ்த்தாய் அறக்கட்டளை மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.உடையார்கோயில் குணா அவர்கள் முயற்சியில் சிறப்பாகத் திட்டமிடப்படுகிறது.. திருக்குறள் மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள்..
|