LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கல்வெட்டியல் கலைச்செம்மல் செ.ராசு காலமானார்

சிறந்த கல்வெட்டு அறிஞரும், தொல்லியலாளருமான புலவர் செ.ராசு அவர்கள் வயது மூப்பின் காரணமாக காலமானார். புலவர் செ.ராசு அவர்கள் மிகச் சிறந்த கல்வெட்டு அறிஞராக அறியப்பட்டவர். விரிவுரையாளராகவும், தொல்லியளாலராகவும் பணிபுரிந்துள்ளார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை வெள்ள முத்துக் கவுண்டன் வலசு கிராமத்தில் 1938 -ஆம் ஆண்டு, ஜனவரி 2-ஆம் நாள் புலவர் செ.ராசு பிறந்தார். பெற்றோர் ந. சென்னியப்பன், நல்லம்மாள்,மனைவி கௌரி மற்றும் மூன்று மகன்களும் உள்ளனர். 

1959 ஆம் ஆண்டில் ஈரோட்டில் உள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர். 1980-1982 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்துள்ளார். பின்னர் அதே 1982 ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்த பின் கல்வெட்டு, தொல்லியல் துறையில் தலைமைப் பொறுப்பில் இருந்து தன் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

பள்ளிக்கல்வியினை திருப்பூர், கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், ஞானிபாளையம், ஈரோடு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை,முதுநிலை பட்டங்களைப் பெற்றவர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் 'கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 

கொங்குநாடு மற்றும் கச்சத்தீவு ஆகிய இடங்கள் பற்றி நூல்கள் பல எழுதியுள்ளார். ஆழமான வரலாற்று ஆதாரங்கள் பலவற்றை இந்நூல்கள் கொண்டுள்ளன. நூற்றுக்கு மேலான புத்தகங்கள், சுமார் 250 கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.

பழங்கால கல்வெட்டுகள் பற்றிய தெளிந்த அறிவும் அனுபவமும் உடையவர். சுமார் 50 வருட கல்வெட்டுகள், சுவடிகள் செப்பேடுகள் தொடர்பான பட்டறிவும் கள அறிவும் மிக்கவர். 2012-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை வழங்கிய உ.வே.சா விருதினை முதன்முதலாகப் பெற்ற பெருமைக்குரியவர். இவரது 'தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்' நூல் 1983- ஆம் ஆண்டில் சிறந்த வரலாற்று, தொல்பொருள் நூலாக தேர்வு செய்யப்பட்டது. 

கல்வெட்டு அறிஞர், கல்வெட்டியல் கலைச்செம்மல், பேரூராதீனப் புலவர் என்ற பட்டங்களை தமிழ் அமைப்புகள் இவருக்கு வழங்கியுள்ளன. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல கல்வெட்டுகள், செப்பேடுகள் சுவடுகளைப் பதிப்பித்து தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய புலவர் செ.ராசு அவர்கள் மறைவு தமிழ் ஆய்வு உலகத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

by R.Gnanajothi   on 06 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.