சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 9- வது கட்ட அகழாய்வில் பாம்பின் தலைப்பகுதி போன்ற வடிவம் கிடைத்துள்ளது. பாம்பின் கண்கள்,வாய் போன்றவை நேர்த்தியாக வனையப்பட்டுள்ளன. இச் சுடுமண் உருவம் சொர சொரப்பான மேற்பரப்போடு, சிவப்பு பூச்சி பெற்றுள்ளது 6.5 செ.மீ நீளம், 5.4 செ.மீ அகலம்,1.5 செ.மீ பருமன் கொண்டுள்ளது. மேலும் சுடுமண்ணால் செய்யப்பட்ட பந்து, வட்டச் சில்லுகள் போன்றவையும் அகழாய்வில் கிடைத்துள்ளதாக மாநில தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் கூறியிருக்கிறார்.
|