LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அரியலூர் மாவட்டம்,பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு செம்மொழி தமிழ் விருது 2023

பேராசிரியர் கா. இராமசாமி அவர்களுக்கு செம்மொழி தமிழ் விருது -2023 வழங்கப்பட உள்ளது. இதனை அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்புச் செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

பேராசிரியர்,முனைவர் க.இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் பிறந்தவர். பெற்றோர் கந்தசாமி, வள்ளியம்மாள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முதுகலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். மொழிகள் பல அறிந்தவர். தமிழை வளப்படுத்தி வளர்க்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர். செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக இருந்து, சிறப்பாக செயல்படுவதற்கான வேராக விளங்கியவர். 
நல்லப்பன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான  செம்மொழி தமிழ் விருது-2023,விருது வழங்கும் நிகழ்வு வருகிற 05.09.2023 காலை 11.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. 

இந்திய மொழிகள் தொடர்பாக மத்திய அரசின் முன்னாள் துணை இயக்குனரும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் க. இராமசாமி அவர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான செம்மொழி தமிழ் விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கருணாநிதி(2006-2011) முதல்வராக இருந்தபோது, செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் பொறுப்பு அலுவலராக பணிபுரிந்துள்ள க.இராமசாமி அவர்கள் தமிழ் செம்மொழி என்பதற்கான ஆவணங்களை சேகரித்துக் கொடுத்தவர். கலைஞருடன் கலந்து பேசி விருதுகள் பலவற்றையும் உருவாக்கியவர். அவற்றில் முக்கியமானது தான் செம்மொழி தமிழ் விருது .இப்போது இவ்விருது அவருக்கே வழங்கப்பட உள்ளது.

 பணி நிறைவிற்குப்பின் அவரால் 'தமிழ் பண்பாட்டு பேரமைப்பு' என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு ஆறு புத்தகத் திருவிழாக்களை அரியலூரில் நடத்தியுள்ளது. முதல் புத்தகத் திருவிழா 2015- ஆம் ஆண்டில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது அரசுடன் இணைந்து ஏழாவது புத்தகத் திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

by R.Gnanajothi   on 06 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.