LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சந்திராயன்-3 வெற்றிச் சோதனை,மாணவர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி, இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

சந்திராயன்-3 வெற்றிச் சோதனை, மாணவர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசு உதவி பெறும் பள்ளியில் சந்திராயன்-3 விண்கலச் சோதனை மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் வகுப்பறை (Smart Class) மூலமாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழிப் பகுதியில் குல்லம்பட்டி ,அரசு உதவிபெறும் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இத்துவக்கப் பள்ளியில் 110 மாணவர்கள் படிக்கின்றனர். சந்திராயன்-3, நிலவில் தரையிறங்கும் நொடிகள், இப்பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக ஆசிரியர்களால் மெய்நிகர் கற்றல் வகுப்பறையில்  ஒளிபரப்பப்பட்டுள்ளன. சந்திராயன்- 3 நோக்கம் மற்றும் செயல்பாட்டினையும் ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். சந்திராயன்-3 வெற்றிச் சோதனையில் விஞ்ஞானிகளது திறமையும், உழைப்பும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டு,  இனிப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.செல்வ கணேசன் மற்றும் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்கான சிறந்த முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அரசு உதவி பெறும் இப்பள்ளியின் தோற்றம் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் வண்ணமயமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கரும்பலகை இல்லை ,வெண்பலகை(White Board)உள்ளது. இது குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து தெளிவோடு பாடம் நடத்த உதவுகிறது என இங்கு பணியாற்றும் ஆசிரியர் கூறுகிறார். வகுப்பறைகள் ஒவ்வொன்றிலும் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது.சுத்தமான குடிநீர் வசதி, மற்றும் மதிய உணவு ஆசிரியர்களின் செலவோடு இங்கு மேலும் தரமாக வழங்கப்படுகிறது. பள்ளியில் இணைய வசதி உள்ளது. மெய்நிகர் கற்றல் வகுப்பறை (Smart Class) மூலமாகவும் பாடங்கள் விளக்கப்படுகின்றன. முக்கிய தினங்கள் பள்ளியில் கவனமாக கொண்டாடப்படுகின்றன மற்றும் கடைபிடிக்கப்படுகின்றன. பள்ளியின் பகுதிகளில் அழகிய பூச்செடிகளும், மரங்களும் வளர்க்கப்பட்டு அவைகள் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பராமரிக்கப்படுகின்றன. அருப்புக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட புத்தக்  கண்காட்சி விழாவில், மாவட்ட ஆட்சியர் முன்பாக இங்கு படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் புத்தக அறிமுகம் செய்துள்ளனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. செல்வகணேசன் அவர்களிடம் பேசியபோது, மாணவர்களது திறன்களையும் திறமைகளையும் வெளிக்கொணர்பவரே சிறந்த ஆசிரியர் அதில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார்.

by R.Gnanajothi   on 06 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.