ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. ஆரம்பம் முதலே இப்பகுதி வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த அகழாய்வுப் பகுதியாக உள்ளது. ஆதிச்சநல்லூரைச் சுற்றியுள்ள திருக்கோளூர், கொங்கராயகுறிச்சி, கருங்குளம் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. திருக்கோளூரில் இதுவரை 324 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுடுமண்ணாலான மணிகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட சிலைகள், கண்ணாடி வளையல் துண்டுகள், வெண்கல வளையல், நாணயங்கள், சீன நாட்டின் பானையோடுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட மத்திய அரசினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
|