தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அரசுப் பள்ளியினைச் சேர்ந்த மாணவி அர்ச்சனா 28 நாட்களில் மட்கும் உயிரி நெகிழியினைக் (Bio plastic) கண்டறிந்துள்ளார். இயற்கையான பொருட்கள் (மக்காச்சோளம், வினிகர் உட்பட 17 இயற்கைப் பொருட்கள்) கொண்டு இந்நெகிழி தயாரிக்கப்பட்டுள்ளது .கரூரில் தமிழ்நாடு அரசின் சார்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் உயிரி நெகிழியினால் இவர் செய்த தட்டு,கிண்ணம் ஆகியவை பாராட்டைப் பெற்றதோடு முதல் பரிசையும் பெற்றுள்ளது. தேசிய அளவிலான போட்டிக்கும் அவரைத் தகுதிப்படுத்தி உள்ளது. 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அர்ச்சனாவின் உயிரி நெகிழி இந்திய அரசின் ஆலோசனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மிகக்குறைவான செலவு கொண்டது. இயற்கைக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் நெகிழியினைக் கையாள மனித இனம் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் மாணவி அர்ச்சனாவின் கண்டுபிடிப்பு கவனத்தைப் பெற்றுள்ளது.
|