பிரமிக்க வைக்கும் தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா!
தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா 16 வயது நிரம்பியவர். ஆகஸ்ட் 10,2005 அன்று பிறந்த பிரக்ஞானந்தா, 2013-ல் உலக இளையோர் சதுரங்க போட்டியில் எட்டு வயது பிரிவில் முதல் இமாலய சாதனையினை பதிவு செய்தார். உலகில் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் ஆனவர்களில்பிரக்ஞானந்தா ஐந்தாவது நபர் ஆவார். 2016-ஆம் ஆண்டு 10 வயது,10 மாதம், 19 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற உலகில் மிக இளைய சதுரங்க வீரரானார். இதனால் ஹங்கேரியின் 27 ஆண்டுகளாக மிக இளைய கிராண்ட் மாஸ்டராக நீடித்த ஜூடித் போல்காரின் சாதனையினை முறியடித்தார். வரலாற்றில் இது முக்கிய சாதனையாக என்றும் இடம்பெறும்.
2022,பிப்ரவரி 22-ஆம் நாள் உலகின் முதல் நிலை வீரராக இருக்கும் மாக்னஸ் கார்ல்சனை வென்றார்.'Airthings Masters' என்ற அதிவிரைவு இணைய வழியிலான சதுரங்கத்தில் மீண்டும் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனையும் மற்றும் கலந்து கொண்ட 15 முன்னணி வீரர்களையும் வென்று வாகை சூடி சதுரங்க உலகை வியக்க வைத்தார் பிரக்ஞானந்தா.செஸ்ஸபில் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் சதுரங்க போட்டியில் 2022,மே 22) மீண்டும் கார்ல்சனை வென்றார் பிரக்ஞானந்தா. ஜூலை 17,2022 செர்பியாவின் சதுரங்க போட்டியில் மீண்டும் அனைத்து வீரர்களையும் என்று சாம்பியன் ஆகி உள்ளார். தமிழகத்தின் சென்னை, Chess Olympiad 2022 -ல் இந்தியாவின் 'B' அணியில் பங்கேற்கிறார் பிரக்ஞானந்தா.
|