வியக்க வைக்கும் மலேசிய தமிழ்ப்பள்ளி ஆசிரியை கோமதி சங்கரன்
ஆசிரியை கோமதி சங்கரன் அவர்கள் மலேசியாவின் ஜோகூர், பாரு பகுதியில் கங்கர் பூலாய் தமிழ்ப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் பல்வேறு புத்தாக்கப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களை குவித்துள்ளார்.மலேசிய சாதனைப் புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. மாணவர்களுக்கும் மிகச்சிறந்த முறையில் புதுமைக்கான சிந்தனையைக் கொடுத்து அவர்களையும் பல்வேறு விருதுகளையும் பெறச் செய்துள்ளார்.தற்போது துருக்கியின் சிறந்த கண்டுபிடிப்பாளருக்கான விருதினைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.மேலும் கனடா நாட்டின் இரண்டு சிறப்பு புத்தாக்க விருதுகளையும், உலக அறிவியல் புத்தாக்க சங்கத்தின் சிறப்பு விருதினையும் பெற்று மலேசிய நாட்டின் அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் பெருமதிப்பைப் பெற்றுத் தந்துள்ளார்.
|