LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா

தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாக அறியப்படும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்கப்பட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பொருநை (தாமிரபரணி) ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், தமிழர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் மிகப் பழம்பெரும் தொல்லியல் களமாகவும், பல அரியப் பொருட்கள் கிடைத்த தொல்லியல் களமாகவும் உள்ளது. 1876-ஆம் ஆண்டு இங்கு அகழாய்வு நடந்தது. அதில் தமிழரின் நாகரீகத்தை தெரிவிக்கும் அரிய பழம் பொருட்கள் பல கிடைத்தன.மீண்டும் 2004-ஆம் ஆண்டில் தான் இங்கு அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கின. 2020-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அறிக்கையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது அருங்காட்சியகத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கீதா ஜீவன்,அனிதா இராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.கனிமொழி முன்னிலை வகிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.குழியின் உள்ளே பொருட்கள் வைக்கப்பட்டு , கண்ணாடி போன்ற அமைப்பினால் மூடி பொருட்களைப் பார்க்கும்படி அமைத்துள்ளனர். நிர்மலா சீதாராமன் இதனையும் திறந்து வைத்தார். பின்னர் பேசிய கனிமொழி அவர்கள், மூதாதையர் வாழ்வியல் எப்படி இருந்தது என்பதனை அகழாய்வு மூலம் கண்டறிய முடியும்.100 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வுகள் நடைபெறுகின்றன. 1905-இல் அலெக்சாண்டரியாவிற்குப் பின்னர் ஆதிச்சநல்லூரில் தான் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. on sight முறையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் பகுதியில் அமையும் அருங்காட்சியகம் உலகில் அனைவரும் பாராட்டக்கூடிய அருங்காட்சியமாக அமைய வேண்டும் என்று கூறினார்.

by R.Gnanajothi   on 23 Aug 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.