தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாக அறியப்படும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்கப்பட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பொருநை (தாமிரபரணி) ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், தமிழர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் மிகப் பழம்பெரும் தொல்லியல் களமாகவும், பல அரியப் பொருட்கள் கிடைத்த தொல்லியல் களமாகவும் உள்ளது. 1876-ஆம் ஆண்டு இங்கு அகழாய்வு நடந்தது. அதில் தமிழரின் நாகரீகத்தை தெரிவிக்கும் அரிய பழம் பொருட்கள் பல கிடைத்தன.மீண்டும் 2004-ஆம் ஆண்டில் தான் இங்கு அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கின. 2020-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அறிக்கையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது அருங்காட்சியகத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கீதா ஜீவன்,அனிதா இராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.கனிமொழி முன்னிலை வகிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.குழியின் உள்ளே பொருட்கள் வைக்கப்பட்டு , கண்ணாடி போன்ற அமைப்பினால் மூடி பொருட்களைப் பார்க்கும்படி அமைத்துள்ளனர். நிர்மலா சீதாராமன் இதனையும் திறந்து வைத்தார். பின்னர் பேசிய கனிமொழி அவர்கள், மூதாதையர் வாழ்வியல் எப்படி இருந்தது என்பதனை அகழாய்வு மூலம் கண்டறிய முடியும்.100 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வுகள் நடைபெறுகின்றன. 1905-இல் அலெக்சாண்டரியாவிற்குப் பின்னர் ஆதிச்சநல்லூரில் தான் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. on sight முறையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் பகுதியில் அமையும் அருங்காட்சியகம் உலகில் அனைவரும் பாராட்டக்கூடிய அருங்காட்சியமாக அமைய வேண்டும் என்று கூறினார்.
|