LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

50 திருவள்ளுவர் சிலைகளை உலகெங்கும் நிறுவிய திரு.வி.ஜி.சந்தோசத்திற்குப் பாராட்டு விழா

அமெரிக்காவில் ஐம்பதாவது சிலையை நிறுவிட்டு திரும்பிய விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு இலங்கை, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் 50 திருவள்ளுவர் சிலைகள் நிறுவிய வி.ஜி. சந்தோசத்திற்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

வி ஜி பி உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் திருக்குறளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் உலகம் முழுவதும் பரப்பி வரும் சேவை நடந்துவருகிறது. இந்த அமைப்பு பல்வேறு திருக்குறள் மாநாடுகளை நடத்திவருவதுடன் திருவள்ளுவர் கருத்துகளை உலகெங்கும் பரப்பும் பணியை தொடர்ந்து செய்துவருகிறது. இந்தியாவில் கங்கைக்கரை, மும்பை தமிழ்ச்சங்கம், விசாகப்பட்டினம் , தென்னாப்பிரிக்கா, டர்பன், மலேசியா தோட்ட மாளிகை, வாஷிங்டன், ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை உள்ளிட்ட இடங்களில் குறிப்பாக 16 வெளிநாடுகளில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சிகாகோ 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 50வது திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார் . இந்த சிலையை அமைக்க சிகாகோ பகுதி மாவட்ட நிர்வாகமே இடம் ஒதுக்கி பொதுவெளியில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஐம்பதாவது சிலை வழங்கிய நிகழ்வை பாராட்டும் வகையில் சென்னை முத்தமிழ் அரங்கத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது. இதை கைத்தடி பதிப்பகம், சர்வதேச மக்கள் உரிமைக் கமிட்டி சார்பாகவும் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், பி.ஜோதிமணி, பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பின் தலைவர் இல.கணேசன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சொல்லின் செல்வர் பீட்டர் அல்போன்ஸ், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, விஜிபி குழும நிர்வாக இயக்குநர் விஜிபி ரவிதாஸ், முதன்மை இயக்குநர் விஜிபி ராஜாதாஸ், பேராசிரியர் அப்துல்காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் டாக்டர் வி.ஜி.சந்தோசம் ஏற்புரையாற்றி பேசினார்.

திருக்குறள் சிலை வழங்குவது என்பது நம் மொழியின் மேன்மையை , நம் கலாச்சரத்தை உலகெங்கும் கொண்டுசெல்வது மட்டுமல்லாது, ஒவ்வொரு சிலையும் அதன் இருப்புக்கான ஒரு இடத்தை பெறுகிறது அந்தந்த பகுதியில் பெறுகிறது. பிறகு, அந்த இடம் தமிழர்கள் கூடி தங்கள் மொழி குறித்தும், வளர்ச்சி, தொன்மை குறித்தும் உரையாடும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது என்பதும் கண் கூடாக காணமுடிகிறது.

by Swathi   on 28 Jul 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.