LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து 2,500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்

கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து கடந்த 2021 ஏப்ரல் முதல் கடந்த ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் 2,500 மோசடி கடன் செயலிகள் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் மக்களவையில் தெரிவித்தார்.

 

நாட்டில் மோசடி கடன் செயலிகளை ஒழுங்குபடுத்துவதில் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

 

 

 

இதற்கு மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த எழுத்துப்பூர்வப் பதிலில், 'மோசடி கடன் செயலிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி மற்றும் மற்ற ஒழுங்குமுறை அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

 

 நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் கூட்டங்களில் இந்த விவகாரம் குறித்து விவாதங்கள் கண்காணிப்பு நடத்தப்பட்டு, முறையாகப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரிசர்வ் வங்கி அங்கீகரித்த இந்தியாவில் செயல்படும் சட்டப்பூர்வக் கடன் செயலிகள் குறித்த பட்டியலைக் கூகுள் நிறுவனத்திடம் மத்திய மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பகிர்ந்துள்ளது.

 

கூர்ந்து ஆய்வு செய்து வருகிறது

 

மேலும், திருத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் கடந்த 2021 ஏப்ரல் முதல் கடந்த ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 3,500 முதல் 4,000 செயலிகளைக் கூகுள் ஆராய்ந்தது. அதில் மோசடி செயலிகளாகக் கண்டறியப்பட்ட 2,500 செயலிகள் ப்ளேஸ்டோர் தளத்திலிருந்து நீக்கப்பட்டன.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையமும் அவ்வப்போது கடன் செயலிகளைக் கூர்ந்து ஆய்வு செய்து வருகிறது' எனத் தெரிவித்தார்.

கடந்த 4 நிதியாண்டுகளில் 2,980 குழுமங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.5,095 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித் துறை பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

இதுகுறித்து மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த எழுத்துப்பூர்வப் பதிலில் 'கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் மொத்தம் 984 குழுமங்களில் சோதனை நடத்தப்பட்டு, ரூ.1,289 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிதியாண்டில் 365 வழக்குகள் தொடரப்பட்டன.

 

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில், 569 குழுமங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.881 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 145 வழக்குகள் தொடரப்பட்டன.

 

ரூ.1,159.59 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

 

115 வழக்குகள் தொடரப்பட்டன

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில், 686 குழுமங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,159.59 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 115 வழக்கு தொடரப்பட்டன.

 

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில், 686 குழுமங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,159.59 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 115 வழக்குகள் தொடரப்பட்டன.

 

கடந்த நிதியாண்டில் 741 குழுமங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 1,765.56 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன, 97 வழக்குகள் தொடரப்பட்டன' எனத் தெரிவித்தார்

by Kumar   on 23 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.