தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை எந்த ஒரு படமாக இருந்தாலும், முதல் வார ஓட்டத்தை, விளம்பரங்களும், அதனுடன் வெளியாகும் படங்களும் தீர்மானிக்கின்றன. அதன் பின் எத்தனை நாட்கள் ஓட வேண்டும் என்பதை, முதல் ஒரு வாரத்தில் படத்தைப் பார்த்த ரசிகர்களின் கருத்துக்கள் தான் தீர்மானிக்கின்றன.
அப்படி அனைத்து ரசிகர்களையும், அதாவது ஏ,பி,சி என மூன்று சென்டர்களிலும் ஒரு சில படங்கள் மட்டுமே ஈர்த்து சாதனை புரிந்தன. அவற்றில் குறிப்பிடப்பட வேண்டிய சில படங்கள் இதோ,
அறிமுக இயக்குனர் ராகவன் இயக்கத்ததில், விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான மஞ்சப்பை, விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா, அறிமுக இயக்குனர் டீகே இயக்கத்தில், கிருஷ்ணா, கருணாகரன், ஓவிய நடிப்பில் வெளியான யாமிருக்க பயமே, அறிமுக இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நட்ராஜ், இஷாரா நடிப்பில், வெளிவந்த சதுரங்க வேட்டை, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடிப்பில் வெளியான வேலை இல்லா பட்டதாரி, விஷ்ணு மற்றும் நந்திதா நடித்த முண்டாசுப்பட்டி, சுந்தர் .சி இயக்கிய அரண்மனை, சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை ஆகியவை குறிப்பிட வேண்டியவை. இந்தப் படங்களின் பட்ஜெட்டும், இவை வெற்றி பெறுமா என்ற எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் ரசிகர்களின் வாய்ப் பேச்சால் மட்டுமே சின்னச் சின்ன ஊர்களில் உள்ள திரையரங்குகளில் கூட வெளியாகி வெற்றி பெற்று நல்ல வசூலைக் கொடுத்தன.
|