LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நெல்லையப்பர் கோவிலில் 200 ஆண்டுகள் பழமையான, தேவாரப் பாடல்கள் கொண்ட ஓலைச்சுவடிகள் கண்டெடுப்பு

நெல்லையப்பர் கோவிலில் 200 ஆண்டுகள் பழமையான, தேவாரப் பாடல்கள் கொண்ட ஓலைச்சுவடிகள் கண்டெடுப்பு

தேவாரப் பாடல்கள் கொண்ட ஓலைச்சுவடிகளோடு, 12 அரியவகை ஓலைச்சுவடிகள் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும்  திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கள ஆய்வு நடைபெற்றது. அப்போது செப்புப் பட்டயங்கள், தாள் சுவடிகள்,அரிய ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டன. கோயில்களில் தற்போது நடைபெற்று வரும் களப்பணியில் பட்டயங்கள் சுவடிகள் கிடைத்த வண்ணம் உள்ளன. சு.தாமரைப்பாண்டியன் (களப்பணியின் திட்ட ஒருங்கிணைப்பாளர், சுவடியியல் துறை பேராசிரியர்) அவர்கள் இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் பி. கே. சேகர்பாபு அவர்களால் கோவில்களில் உள்ள அரிய சுவடிகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சியினால் சுவடி திட்டக் குழுவினர்கள் களப்பணியில் ஈடுபட்டு செயலாற்றிக் கொண்டிருப்பதை கூறினார். 

சுவடியியளாளர்கள் மா.பாலசுப்பிரமணியன்,கா. சந்தியா,இரா.சண்முகம் நா.நீலகண்டன் ஆகியோர் நெல்லையப்பர் கோவிலில் களப்பணியில் ஈடுபட்டனர்.அதில் மன்னர்களின் பெயர்கள், அவர்கள் வழங்கிய கொடைகள் மற்றும் தானங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருந்தன. சொக்கநாத நாயக்கர், விசுவநாத நாயக்கர், முத்து வீரப்ப நாயக்கர், சேர குல இராமபாண்டியன், இரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் ஆகியோரது நிலதானங்கள் பற்றிய செய்திகள் இருந்தன.

பின் 200 ஆண்டுகள் பழமையான 13 ஓலைச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டன 'தோடுடைய செவியன்' என்ற பாடல் எழுதப்பட்ட திருஞானசம்பந்தரது தேவாரப் பாடல் எழுதப்பட்ட ஓலைச்சுவடி கிடைத்துள்ளது. சுவடிகள் எந்தச் சிதைவும் இன்றி நல்ல நிலையில் உள்ளன. இதனை  நூலாக்கம் செய்வதற்கான முயற்சிகள் உடனடியாக எடுக்கப்பட உள்ளன. மின் நூலாக்கப் பணியும் நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவில்களிலும் இக்களப்பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

by R.Gnanajothi   on 05 Jul 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.