|
||||||
தமிழ் சினிமாவில் வெறும் 12 மணி நேரத்தில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம்..! |
||||||
கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான சுயம்வரம் படம் தான் மிகக்குறைந்த நேரத்தில் அதாவது, 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது, சுயம்வரம் படத்தின் சாதனையை முறியடிக்கும் விதத்தில், வெறும் 12 மணி நேரத்தில் ஒரே இடத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி சாதனை புரிய போகிறார்களாம் ஒரு புதிய படக்குழுவினர். இந்த புதிய படத்திற்கு நடு இரவு என பெயர் வைத்துள்ளர்கலாம். படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்களே! கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுகை மாரிசா. ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.S.மோகன்குமார் இதனை தயாரிக்கவிருக்கிறார். படம் பற்றி அதன் இயக்குனர் புதுகை மாரிசா கூறியதாவது..... இந்த மாதம்(செப்டம்பர்) 19-ம் தேதி படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம். மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை துவக்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளோம். பேய் சம்மந்தப்பட்ட கதை என்பதால் முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கிறோம். பேய் என்பதால் தெரிந்த முகங்கள் எதுவும் தேவையில்லை. எந்த பேயாக இருந்தாலும் திகில் இருந்தால் போதும் என்பது என் கருத்து. முக்கிய வேடத்தில் மோனிகா என்ற சிறுமி நடிக்கிறார். என புதுகை மாரிசா கூறியுள்ளார். |
||||||
by Swathi on 15 Sep 2014 0 Comments | ||||||
Tags: Nadu Iravu Nadu Iravu Movie Nadu Iravu Story நடு இரவு | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|