LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தனியார் வசம் இருந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி அரசே ஏற்கிறது!

108 ஆம்புலன்ஸ் சேவையை இனி அரசே ஏற்று நடத்தவிருக்கிறது.

தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கும் விதமாக குடும்பநலம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் கடந்த 2008ல் அண்ணா பிறந்தநாளையொட்டி அவசரகால ஆம்புலன்ஸ் சேவையான 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. 

முதற்கட்டமாக சென்னையில் 21 ஆம்புலன்ஸ்களை கொண்டு இந்த சேவை தொடங்கப்பட்டது. பின்னர் இச்சேவை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது மொத்தம் 951 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 
தனியார் நிறுவனத்தின கீழ் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு, மருத்துவ உதவியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என மொத்தம் 4,500 பேர் வேலை செய்து வருகின்றனர்.

 வேலூர் மாவட்டத்தில் 54 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 250 பேர் சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு அரசு சார்பில் ஊதிய உயர்வு தொகையாக ரூ3.42 கோடி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. 

இதுகுறித்து விசாரித்ததில், ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகித்து வரும் தனியார் நிறுவனம் அதனை பெற்றுத்தருவதில் காலதாமதம் செய்து வருவதாக தெரிகிறது. மேலும், அந்நிறுவனத்தின் ஒப்பந்த காலம் இன்னும் 2 மாதங்களில் முடியவிருப்பதால்,  அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தனியார் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  அதன்படி தமிழகம் முழுவதும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாள்தோறும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை ஆய்வு செய்ய இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒரு களப்பணியாளர் நியமிக்கப்பட உள்ளனர்.


உவ்வாறு அவர் கூறினார்

by Mani Bharathi   on 02 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.