|
|||||
தனியார் வசம் இருந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி அரசே ஏற்கிறது! |
|||||
108 ஆம்புலன்ஸ் சேவையை இனி அரசே ஏற்று நடத்தவிருக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கும் விதமாக குடும்பநலம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் கடந்த 2008ல் அண்ணா பிறந்தநாளையொட்டி அவசரகால ஆம்புலன்ஸ் சேவையான 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னையில் 21 ஆம்புலன்ஸ்களை கொண்டு இந்த சேவை தொடங்கப்பட்டது. பின்னர் இச்சேவை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது மொத்தம் 951 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 54 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 250 பேர் சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு அரசு சார்பில் ஊதிய உயர்வு தொகையாக ரூ3.42 கோடி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. இதற்கிடையில் தனியார் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாள்தோறும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை ஆய்வு செய்ய இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒரு களப்பணியாளர் நியமிக்கப்பட உள்ளனர்.
|
|||||
by Mani Bharathi on 02 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|