பாகிஸ்தானில் இந்திய மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை அதிகளவில் ஒளிபரப்பிய பத்து டி.வி. சேனல்களுக்கு தலா 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தனியார் டி.வி. சேனல்கள், மொத்த நிகழ்ச்சிகளில் 10 சதவீதம் மட்டும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த 10 சதவீதத்தில் 60 சதவீதம் இந்திய நிகழ்ச்சிகளாகவும், 40 சதவீதம் ஆங்கில நிகழ்ச்சிகளாகவும் இருக்க வேண்டும். பாலிவுட் படங்கள், இந்தி நாடகங்களுக்கு பாகிஸ்தான் மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. இதனால் இந்திய நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் உள்ள ஹம் டி.வி, ஆக்ஸிஜன் டி.வி, பிளே டி.வி, கோஹினூர் உட்பட 10 டி.வி சேனல்கள் அதிகளவில் ஒளிபரப்பின. டி.வி. சேனல்கள் நிகழ்ச்சிகள், விளம்பரங்களை பெம்ரா என்ற அமைப்பு கண்காணித்து பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அறிக்கை அனுப்புகிறது. இந்த அமைப்பு அளித்த அறிக்கையின்படி இந்திய மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை அதிகளவில் ஒளிபரப்பிய 10 டி.வி. சேனல்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் ரூ.1 கோடி அபராதம் விதித்ததோடு மட்டுமல்லாமல், இதுபோன்ற விதிமுறை மீறல்களை தவிர்க்கும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
|