LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

அம்மாவும் பிள்ளைகளும்

அம்மாவும் பிள்ளைகளும்

 

இரத்த சிவப்பாய்

அடிவானம்

 

சில விநாடிகளில்

சூரியனை

பெற்றெடுத்து

உலகிற்கு காட்டுவதற்கு

தயாராகிறாள்

 

முளைத்த முப்பது

நிமிடங்களுக்கும்

தானே தனியாய்

இயங்க ஆரம்பித்து

விட்டான்.

 

தவழ்ந்து தவழ்ந்து

வானத்து தாய்

உடல் மீது

நகர்ந்து சென்றதால்

அவன் உடல்

வெளிப்படுத்திய

வெப்பம்

கீழிருப்பவர்களை

தகிக்கத்தான் வைக்கிறது

 

தாங்கமுடியாமல்

அவனை பெற்றெடுத்த

வானத்து தாயை

அண்ணாந்து பார்க்க

 

அவள் மனமிரங்கி

மறுபுறமாய்

அவனுக்கு விளையாட்டு

காட்டி கீழே

தவழ்ந்து வர

செய்கிறாள்

 

தவழ்ந்து தவழ்ந்து

கீழ் வந்தவனை

சட்டென உள்ளிழுத்து

தனது அடிவயிற்றில்

புதைத்து கொள்கிறாள்

 

அவனால் உண்டான

தகிப்பை குளுமை

படுத்த

 

மறுபுறமாய்

நிலவை பெற்றெடுத்து

தனது மேனியில்

தவழ அனுப்புகிறாள்

 

அவனும் தமையனை

போல தவழ்ந்து

மேலேற

அவன் உடல்

குளுமை கீறங்கி

சாந்தப்படுத்த செய்கிறது

 

 

வானத்து அம்மாவும்

இந்த இரு

சகோதரர்களின்

விளையாட்டு

 

எத்தனை

நூற்றாண்டுகளாய்

நடந்து கொண்டிருக்கிறதோ?

Mother and child
by Dhamotharan.S   on 08 Mar 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.