அடுத்த மாதம் தொடங்கும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யுவராஜ் சிங், ஒன்பது மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்த முறை சேவாக், கம்பீருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் 5 ஆம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி மற்றும் முதல் மூன்று ஒரு நாள் போட்டிக்கான (அக்.13, அக்.16, அக்.19) இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சந்தீப் பட்டேல் தலைமையிலான குழுவினர் சென்னையில் கூடி அணியை தேர்வு செய்தனர். இதில் இடம் பெற்றுள்ள வீர்கள் பின்வருமாறு.
தோனி தலைமையிலான அணியில் தவான், ரோகித் சர்மா, விராத் கோலி, இஷாந்த் சர்மா, வினய்குமார், அமித் மிஸ்ரா, அப்பதி ராயுடு, முகமது சமி, ஜெயதேவ் உனத், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
|