LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நடை அடைப்பை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்!

சபரிமலையில் துலாம் மாத பூஜைக்காக திறக்கப்பட்ட நடை அடைக்கப்பட உள்ளதால், பக்தர்களின் அதிக அளவில் குவிந்து உள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்ய பெண்களுக்கு அனுமதியளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.  கடந்த 17ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஆனால் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பராம்பரிய வழிபாட்டு கொள்கை காக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து சபரிமலைக்கு வந்த 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்  ஏற்பட்டதால், அங்கு கலவரம் நிலவியது. எனவே சபரிமலை, நிலக்கல் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த தடை உத்தரவானது நீடிக்கிறது. துலாம் மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 6வது நாளாகும் நிலையில்,  நடை அடைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில்  சபரிமலைக்கு 15 பெண்கள் வர உள்ளதாக தகவல் வெளியானதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.  கடைசி நாள் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாத சூழல் நிலவுகிறது. எனவே சபரிமலை மற்றும் பம்பையில் உள்ள பத்திரிக்கையாளர்களை வெளியேற உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

by Mani Bharathi   on 22 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.