1 வேலிக்குப் பயிர்கள் மேலே விருப்பமே இல்லைப் போலும்! -சோலிக்கு முடிவு காண்பம்! சுடுவம், என்று எழும்பிச் சென்று தீ வைத்து முடித்த வேலி திருப்தியை அடைந்திருக்கும் - கோபத்தைத் தீர்த்திருக்கும்.
குவிந்ததோ - பயி¡¢ன் சாம்பல்!
2 தோட்டமுங் கொஞ்சம் செழிப்பு; பயிர் பச்சை நீட்டமாய் நீண்டு நெருங்கி மதாளித்துச் சேட்டமாய் நிற்கிறது, செந்தளிர்ப்பாய். காய் கனிகள், பூக்கள் குலுங்கும் புளுகமுள்ள கொப்புகளைக் காட்டி நிற்கும் கண்குளிர, இன்பச் சிறு செடிகள்.
கற்கள் மலிந்த கலட்டித் தரையிலே புற்கள் படர்ந்து புலுண்டுவது தான் இந்தக் காணி நிலத்தின் இயற்கை. அதை மாற்ற என்று தீர்மானஞ் செய்த செயற் - கை வலிமையினால், கிண்டிக் கிளறி, கிணறிறைத்து நீர் பருக்கிக் கொண்டிருக்கும் செய்கை கொடுத்த பலன்களினால் தோட்டமுங் கொஞ்சம் செழிப்பு, மதாளிப்பு!
நீர் இறைப்புத் தீண்டாமல் நிற்கின்ற புல் நுனிகள் காய்ந்து சருகாய்க் கருகி இருந்தாலும், பூச்சி அ¡¢த்துவிட்ட பூசணியின் சாம்பல் இலை ஓட்டை பிடித்துத் துவண்டு கிடந்தாலும், நோய்பிடித்த கத்தா¢யின் நு¡றிலையில் தொண்ணு¡று சூம்பிக் குனிந்தபடி தொய்ந்து கிடந்தாலும், அங்கங்கே நல்ல அழகான பச்சை உண்டு. கண் குளிர - இன்பச் சிறு செடிகள் - தோட்டம் எங்கும்!
தோட்டமோ கொஞ்சம் செழிப்பு - மதாளிப்பு!
3 சுற்றி நின்ற வேலி சுருக்கென்று சீறிற்றாம். நட்ட நடு இரவில் - நாலுபேர் காணாத கன்னங்கா¢ இருட்டில் - காற்சட்டை போடாமல், தோட்டத்துள் வேலி நுழையத் தொடங்கியதாம். வேலி பயிரை எல்லாம் மேய என்று போயிற்றாம். மேயத் தொடங்கி விறுக்கென்று சப்பிற்றாம். மென்று மென்று தின்றதாம். மேல் இருந்த கொப்புகளை வா¡¢ இழுத்து வளைத்து, முறித்தெறிந்து, வேரோடு வாங்கிப் பிடுங்கி மிதித்ததாம். ஓங்கி உதைத்துத் துவைத்துப் பொடியாக்கித் தீங்கு பரத்திச் சிதைத்ததாம் தோட்டத்தை. பற்றாத பச்சைப் பயிர்கள் என்றும் பாராமல், பெற்றோலை ஊற்றி நெருப்பும் கொழுத்திற்றாம். வேலி கடித்து மிதித்த பயிர்க் குப்பைகளும் வெந்து பொசுங்கிப் புதைந்து கா¢யாகி நொந்து சுருண்டு - வெறுஞ் சாம்பலாய்ப் போயினவாம்.
4 வேலை நிறுத்தமொன்றை வேலை அற்ற சண்டியர்கள் ஏவற் பேய் ஆகி இழுத்து விழுத்துதல் போல் வேலி பயிரை எல்லாம் மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?
காலிப் பயல்கள் கடையை உடைப்பதுபோல் வேலி பயிரை எல்லாம் மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?
காடையர்கள் நு¡லகத்திற் கைவா¢சை காட்டுதல்போல் வேலி பயிரை எல்லாம் மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?
கொன்று தெருவிற் பிணங்கள் எறிவதுபோல் வேலி பயிரை எல்லாம் மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?
5 வேலிக்குப் பயிர்கள் மேலே வெறுப்புத்தான் இருக்கும் என்றால் - வேலி ஏன்? காவல் ஏனோ? காவலோ வேலியாலே?
|