LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

வீரத்தைத் தூக்கு

துப்பாக்கி தூக்கியவனைக் கண்டதும்
தொடை நடுங்காதே!
நீ பிறந்தது, என்றைக்கோ ஓர்நாள்
சாகத்தான்;
அது நிச்சயம்.

அந்த இடைவெளியில் ஆடும் ஆசைகளுக்காய்
இன்னும் வாழ ஆசைப்பட்டு,
துப்பாக்கி ஏந்தியவனைக் கண்டதும் - அவன்
விடுதலைப் பதரானாலும் சா¢
ராணுவக் காட்டுமிராண்டி யானாலும் சா¢
தொடை நடுங்காதே!

துவக்கினால் தான் உனக்குச் சாவுவரும் என்பது
என்ன நிச்சயம்?
கொலைஞனின் கையில் இருக்கும் துப்பாக்கி
அவனுக் கெதிராய் மாறாதென்பது என்ன நிச்சயம்?
துவக்கையும் ஒரு பொருளாய்ப் பார்
உனக்குப் பழக்கப்பட்ட கத்தி, பொல்லு
போலவே அவையும் குணமற்றிருக்கும்
பொருட்கள்ளூ நிர்குணிகள்;
அவற்றுக்கு குணமேற்றுபவன் மனிதன்.
கொலைஞன் கையில் இருக்கும் துவக்கு
மின்வெட்டுத் தாக்குதலில் உன்கை மாறாதா?
கொலைஞா¢ன் துவக்குகள் விடுதலைக்காய்
வேட்டு வைக்காதா?
குணமேற்றுபவன் நீ!

ஆகவே, துப்பாக்கி தூக்கியவனைக் கண்டதும்
தொடை நடுங்காதே!
நீ உன் வீரத்தைத் தூக்கு.

உன் வீரத் தூக்கலில் எதி¡¢ வெடவெடக்கட்டும்
ஜந்து துப்பாக்கிக் கொலைஞர்* ஜம்பது பேரைக்
கொல்ல, கழுத்தைக் கொடுத்து நிற்கும்
பலிக்கடாவா மனிதர்?
நீ உன் வீரத்தைத் தூக்கு.

உன்னில் ஒருவன் விழலாம், இருவர்
விழலாம் மூவர் அல்லது நால்வர் பலியாகலாம்
ஆனால் நீ தூக்கிய வீரத் திரட்சியில்
கொலைஞா¢ன் கை தொடர்ந்து நீளாமல்
அவர்கள் அனைவரும் பந்தாடப்படலாம்.
உன்னைக் கொல்வது துப்பாக்கியல்ல
வாழும் ஆசையில் கிடந்தாடும் கோழைமை
ஆகவே,

ஏய்,
வீரத்தைத் தூக்கு
விடுதலையைச் சுரண்டவரும்
எத்தகைய துப்பாக்கிப் பதர்களும்
வெட வெடக்கட்டும்
வெட வெடக்கட்டும்!

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.