|
||||||||
உன்னைக் காதலிக்கிறேன் உயிராய் -தண்மதி |
||||||||
எனக்கானவளே என் உயிரின் மொத்தத்தையும் உனதாக்கியவளே என் வழிகள் முழுவதும் நீதான் வரப்போகிறாய் என் வாழ்க்கைத்துணையாய் என் வாழ்வின் அர்த்தமாய் கடவுள் தந்த பரிசு நீ என் காதலின் கௌரவம் நீ ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும் என்னால் காதலிக்க முடிகிற ஒருத்தி உன் அருகில் இருப்பது சுகம் உன் கைவிரல் பிடிக்கவே இத்தனைநாள் தவம் நீ சொல்கிற ஒவ்வொரு வார்த்தையும் அழகு உன் பார்வை , உன் தூக்கம் ,ஒவ்வொன்றும் அழகு எனக்கான உன் கண்ணீருக்கு நான் உன் காலடி சேர்ந்தாலும் தகும் நீ எனக்கு மட்டுமானவள் என்னை உயிரோடு எரித்தாலும் கடைசிச் சாம்பலிலும் உன் பெயரே மிஞ்சும் என் பாதியானவளே உன்னால் இன்று பைத்தியமானேன் உன்னைப் பார்க்காத நிமிடங்களில் ஏங்கிப் போகிறேன் என் கையெழுத்து கூட அழகாய்க் கிடைக்கிறது இன்று நீ என் மனம் முழுதும் இருப்பதால் ... காட்சிகளெல்லாம் வசந்தங்கள் தான் நீ கண்களிலே இருப்பதனால் என் புலன்களெல்லாம் பூபூக்க வைத்தவளே என் பரிசுத்தமானவளே உன்னைக் காதலிக்கிறேன் இந்த உலகத்தைக் காட்டிலும் பெரிதாய் என் ஒவ்வொரு அணுவிலும் நுழைந்து என்னை இயக்கி வெற்றியின் படிக்கட்டுகளுக்கு வழிநடத்துபவளே என் உயிரின் உயிரானவளே உன்னைக் காதலிக்கிற இன்பம் எந்தக் காவியங்களிலும் கிடைக்காதென்பேன் ஏன் இந்தப் பிரபஞ்சத்திலேயே கிடையாதென்பேன் ஒரே நிமிடத்தில் என்னை மகிழ்ச்சிப்படுத்தவும் ஒரே நிமிடத்தில் என்னை உடைத்துவிடவும் உன்னால் மட்டுமே முடியும் உன் காதலைவிட எது வேண்டும் எனக்கு நான் சுவாசிக்கிற காற்றை விட முக்கியமானது எனக்கு உன் காதல் நான் வாழ்வதற்கு ... உன் காதலோடு வாழவும் உன் காதலோடு மரணிக்கவும் எனக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது உலகின் மிக முக்கியமான அதிர்ஷ்டசாலி நான் எனக்கானவளே ...எனதானவளே
உன்னைக் காதலிக்கிறேன் உயிராய் …
-தண்மதி |
||||||||
by Swathi on 22 Apr 2015 3 Comments | ||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|