LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் உள்ளதாக மத்திய வனத் துறை அமைச்சர் தகவல்.

புதுடெல்லி இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் உள்ளன என்று மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

 

மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவின் பனி சூழ்ந்த மலைப் பகுதிகளில் பனிச்சிறுத்தைகள் காணப்படுகின்றன. சர்வதேச அளவில் 7,000 பனிச்சிறுத்தை கள் மட்டுமே உள்ளன. தோல் மற்றும் உடல் பாகங்களுக்காக இவை வேட்டையாடப்பட்டு வருகின்றன.

 

இதனால் பனிச்சிறுத்தைகள் விலங்கினம் அழிவில் இருப்பதாகச் சர்வதேச விலங்கியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் டெல்லியில் ஆய்வறிக்கை வெளியிட்டார்.

 

அறிவியல்பூர்வமாக கணக்கெடுப்பு

 

அதில் கூறியிருப்பதாவது, "இந்தியாவில் இமயமலைப் பகுதியில் பனிச்சிறுத்தைகள் வாழ்கின்றன. லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த 2019 முதல் 2023-ம் ஆண்டு வரை பனிச்சிறுத்தைகள் தொடர்பாக அறிவியல்பூர்வமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் 718 பனிச் சிறுத்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

 

மிக அதிகபட்சமாக லடாக் இமயமலைப் பகுதிகளில் 477 பனிச்சிறுத்தைகள் உள்ளன. உத்தராகண்ட்டில் 124, இமாச்சலப் பிரதேசத்தில் 51, அருணாச்சல பிரதேசத்தில் 36, சிக்கிமில் 21, ஜம்மு-காஷ்மீரில் 9 பனிச் சிறுத்தைகள் உள்ளன" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து இந்திய விலங்கியல் நிபுணர்கள் கூறும்போது, ‘‘நகரமயமாக்கம், சுரங்கம், பருவநிலை மாறுபாடு காரணமாகவும் பனிச்சிறுத்தைகளின் இனப் பெருக்கம் பாதிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான், மேற்கு சீனா, மங்கோலியா மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதிகளிலும் பனிச்சிறுத்தைகள் உள்ளன. அந்த நாடுகளைவிட இந்தியாவில் பனிச்சிறுத்தைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் இவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது’’ என்றனர்.

by Kumar   on 31 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.