|
|||||
உக்காரா |
|||||
தேவையானவை : பாசிப்பருப்பு - ஒரு கப், அரிசி மாவு - 2 ஸ்பூன் சர்க்கரை - 1 கப் தேங்காய் துருவல் - அரை கப் முந்திரிப்பருப்பு - 2 ஏலம் - 2 நெய் - கால் கப் எண்ணெய் - 1 ஸ்பூன் செய்முறை : 1.ஒரு வானலியில் பாசிப்பருப்பை மிதமான தீயில் லேசாக வறுத்து குழையாமல் வேக வைத்து தண்ணிரை வடிகட்டவும், 2.எண்ணெய் நெய் கலந்து காய வைத்து அதில் அரிசி மாவு, முந்திரி,ஏலம் சேர்த்து குறைவான தீயில் வறுக்கவும் 3.அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கரைய விடவும், மாவில் சர்க்கரைப் பாகை விட்டு, வெந்த பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறவும். சுவையான உக்காரா சாப்பிடத் தயார். |
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|