LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆளில்லா உளவு விமானம் திருஷ்டி 10 ஸ்டார்லைனர்!

அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆளில்லாமல் தொடர்ந்து 36 மணி நேரம் இயங்கும் அதிநவீன ட்ரோனை உருவாக்கி உள்ளது.

 

கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 40 நாட்களில் 35 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தியக் கப்பல்களும் இவ்வாறான தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.

 

இந்த நிலையில் அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆளில்லா அதிநவீன ட்ரோனை உருவாக்கி அதை இந்தியக் கடற்படை இடம் ஒப்படைத்து இருக்கிறது.

 

இந்த ட்ரோனுக்கு திருஷ்டி 10 ஸ்டார்லைனர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அதிநவீன கேமராக்கள், அதிநவீன சென்சார்கள், மேம்பட்ட தகவல் தொடர்புத் திறன்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் கருவி, இலக்குகளைத் துல்லியமாக அடையாளம் காணும் தொழில்நுட்பம், ஆயுதம் தாங்கும் செயல்திறன் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

 

இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியான பயன் 

 

இது 36 மணி நேரம் தொடர்ந்து பறக்கக்கூடியது. மேலும் இதனுடைய எடை 450 கிலோ ஆகும். இந்த ட்ரோன் மூலம் நுண்ணறிவு, கண்காணிப்பு, உளவு நடவடிக்கைகள் எளிதாக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து இந்தியக் கடற்படை கூறியிருப்பதாவது, "இந்தத் திருஷ்டி 10 ஸ்டார் லைனர் பல்வேறு வகைகளில் இந்தியக் கடற்படைக்கு உதவும். இது மிக முக்கியமான உளவு கருவியாக மாறி இருக்கிறது. மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீனத் தொழில்நுட்பங்கள் இந்தியக் கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்து இருக்கிறது. மேலும் இது முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

 

இந்த ட்ரோன் மூலம் இந்தியா வெளிநாடுகளிடமிருந்து ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை குறையும், இது இந்தியாவிற்குப் பொருளாதார ரீதியான பயனாகவும் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Kumar   on 20 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.