|
|||||
புகையிலை பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் ! உற்பத்தியில் மூன்றாவது இடம் !! |
|||||
நாட்டு மக்களிடையே புகையிலை பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பான, சர்வதேச கருத்தரங்கு டெல்லியில் நேற்று நடைபெற்றது. உலக சுகாதார மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத், மத்திய சுகாதாரத் துறை செயலர், டெய்சி ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் குறிப்பிடப்பட்ட சில முக்கிய தகவல்கள் பின்வருமாறு,
1. புகையிலை உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடம், பயன்பாட்டில் இரண்டாவது இடம்.
2. நாட்டில் புகையிலைக்கு அடைமையானோரின் எண்ணிக்கை 27.6 கோடி பேர்.
3. இந்திய இளைஞர்களில் 35 சதவீதம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
4. சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட, குட்கா, ஜர்தா போன்ற புகையிலை பழக்கம் தான், அதிக அளவில் உள்ளது.
5. சிகரெட் பிடிக்கும் பழக்கம், 9 சதவீதம் பேரிடம் உள்ளது என்றால், குட்கா, ஜர்தா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோரின் சதவீதம், 35 வரை உள்ளது.
6. பொது இடத்தில் புகை பிடிப்பதற்கும், புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களின் விளம்பரங்களுக்கும், உள்ள தடையால், புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிகை குறைந்து வருகிறது.
7. புகையிலை ஒழிப்பில் நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என இந்த கருத்தரங்கில் கேட்டுக்கொள்ளப்பட்டது. |
|||||
by Swathi on 11 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|