மிகவும் பழமை வாய்ந்த கொல்கத்தா அருங்காட்சியகத்தைப் பார்வையிட டிக்கெட், அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் கிடைக்கும்.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகம் அமைந்து உள்ளது. இது, தென்மேற்கு ஆசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மற்றும் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.
இதனைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள், நுழைவு டிக்கெட் வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து அருங்காட்சியக இயக்குனர் புரோகித் கூறியதாவது:
“ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் புதிய நடைமுறை ஜனவரி முதல் அமலாகும். அருங் காட்சியகத்தை பார்வையிட வருவோருக்கு இது புத்தாண்டு பரிசு ஆகும். அருங்காட்சியகத்தில் உள்ள 14,383 பொருட்களில் 6 சதவீதம் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டு உள்ளன.’’ இவ்வாறு அவர் கூறினார்.
|