LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

தொல்காப்பிய இலக்கணக் கடலில் முத்துக்கள் எடுத்த தமிழகத்தின் மொழியியல் பேராசிரியர்கள் சிலரின் நூல்களின் படங்கள் ...

தொல்காப்பியத்தை மொழியியல் நோக்கில் ஆராய்ந்து , தொல்காப்பியத்தின் சிறப்புக்களை உலக அளவில் கொண்டுசென்றுள்ள மொழியியல் பேராசிரியர்களின் நூல்களின் படங்களைக் கீழே அளித்துள்ளேன்.
பேராசிரியர்கள் தெ.பொ.மீ. வி.ஐ. சுப்பிரமணியம், ச. அகத்தியலிங்கம், முத்துச்சண்முகம், குமாரசாமி ராஜா, இ. அண்ணாமலை, இசுரேல், சி. சுப்பிரமணியன், நீதிவாணன், விசயவேணுகோபால், இரா. தாமோதரன், கி. கருணாகரன், பா. ரா. சுப்பிரமணியன், அ. காமாட்சிநாதன், க. முருகையன், கே.எஸ். கமலேஸ்வரன், பொற்கோ, இரங்கன், ஞானசுந்தரம், ..... இன்னும் பட்டியல் நீளும். அவர்களது நூல்களின் படிகள் தற்போது என்னிடம் இல்லை. இவர்கள் அனைவரும் தமிழ்ப் புலவர், வித்துவான், பி.ஓ.எல். எம் ஏ போன்ற தமிழ்ப்படிப்புக்களை மேற்கொண்டுவிட்டு, பின்னர் மொழியியல் துறையில் இணைந்து ஆய்வு மேற்கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்களில் சிறப்பான பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
 
அடுத்து, மேற்கூறிய முதுபெரும் பேராசிரியர்களின் மாணவர்களாகிய சி. சண்முகம், செம்மொழி க. இராமசாமி, ந. நடராசபிள்ளை, ல. இராமமூர்த்தி, ஆதித்தன், கி. உமாதேவி, மு. அபிராமி உட்பட பலர் தொல்காப்பியத்தைப்பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
1970-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் மொழியியலாளர்கள், தமிழ் இலக்கண அறிஞர்கள் பலர் பங்கேற்ற ''தொல்காப்பிய மொழியியல்'' கருத்தரங்கின் நூல் வடிவம் என்னிடம் இல்லை. நண்பர்களிடம் இருந்தால் எனக்குப் படி எடுத்து அனுப்பவும். அதற்கான செலவுத்தொகையை நான் அனுப்பிவைக்கிறேன்.
 
அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல்துறைப் பேராசிரியர் க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தொல்காப்பியரின் நூற்பாக்களின் சொல்லிலக்கணம் பற்றி மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் எனது மாணவிகள் முனைவர் கி. உமாதேவி, திருமதி மு. அபிராமி இருவரும் தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு ஒரு மென்பொருள் (தொல்காப்பியத் தரவகம்)உருவாக்கி அளித்துள்ளார்கள். அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன். இந்த மென்பொருளை மேலும் தொடர்ந்து செம்மைப்படுத்தப் பணி மேற்கொண்டுவருகிறார்கள். இந்த மென்பொருளைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் செம்மைப்படுத்தக் கருத்துரைகளை அனுப்பலாம். நன்னூலுக்கும் திருக்குறளுக்கும் இதுபோன்ற முயற்சியை எங்கள் ஆய்வுக் குழுவினர் மேற்கொண்டுவருகிறார்கள்.
 
இந்தப் பதிவின் நோக்கம்... பழந்தமிழ் இலக்கணங்களின் சிறப்பைத் தற்கால மொழியியல் துறை அறிவின் அடிப்படையில் வெளிப்படுத்தும் ஏராளமான ஆய்வுகள் தமிழகத்தில் ஏராளமாக நடைபெற்றுள்ளன என்பதை நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்கேயாகும். மொழியியலின் வேறு பல பிரிவுகளிலும் மொழியியல் பேராசிரியர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறபோதிலும், பழந்தமிழ் இலக்கணங்களின் சிறப்பை உலகளாவிய அளவில் கொண்டுசெல்லத் தொடர்ந்து முயல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.